4 டிசம்பர், 2010

மன்னார் மாவட்டத்தில் அடை மழை: 31,000 பேர் பெரும் பாதிப்பு; வீடு இடிந்து விழுந்து மூவர் காயம்


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக, 7 ஆயிரத்து 533 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளை தெரிவித்தார்.

வெள்ளநீர் தேங்கியிருக்கும் பகுதி களிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் தற்கொழுது முன்னெடுத்துள்ளோம். வெள்ளநீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக கால்வாய்களை உடைத்துப் பெருப்பிக்க நடவடிக்கை

எடுத்திருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தினகரனுக்குத் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்களுடன் தங்க வைத்திருப்பதுடன், அவர்களுக்கான சமைத்த உணவுகளையும் வழங்கி வருகின்றோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களைப் பொது இடங்களில் தங்கவைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்காக சில பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்குத் தொற்றுநோய்கள் ஏற்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது தொடர்பாகப் பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில், அவ்வீட்டிலிருந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான உதவி களை வழங்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்லஸ் பிள்ளை மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக