4 டிசம்பர், 2010

வலி வடக்கில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட திருடர்கள்

வலி வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவர்கள் அந்தப் பகுதியில் தமது வீடுகளை பார்வையிடச்சென்ற பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

பன்னாலைப் பகுதியில் ஆட்கள் இல்லாத வீடுகளில் இருந்த கதவுகள் மற்றும் தளபாடங்களை திருடிக்கொண்டு இருந்தவேளையில் அந்தப் பகுதியால் தமது வீடுகளுக்கச் சென்ற மக்கள் இதனைக்கண்டு உரியவர்களை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

அந்த வீடுகளில் 7பேர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களில் நான்குபேரை மாத்திரமே பிடிக்க முடிந்ததாகவும் அப்பகுதி மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தொடர்ச்சியாக திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக