4 டிசம்பர், 2010

ஜயலத் ஜயவர்தன தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது


எமது அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிர மாணம் செய்த பின்னர் அதற்கு முரணாக செயற்படும் எவரையும் நாம் தப்பிக்கவிட மாட்டோம். இதேபோன்றே ஜயலத் ஜயவர்தன எம்.பி.யும் தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என ஆளும் கட்சி பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குண வர்தன கூறினார்.

எமது நாட் டையும், ஜனாதி பதியையும் பாதுகாப்பதற்காக நாம் பாராளுமன்றத்தை விட்டு வெளியே

செல்லவும் தயாராகவுள்ளோம் என்றும் அமைச்சர் தினேஷ் கூறினார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தினுள் நடைபெற்ற அமளிதுமளி தொடர்பாகவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் டொக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. தன்னிலை விளக்கி உரையாற்றினார். அவரது உரை நிறைவடைந் ததன் பின்னர் பேசும் போதே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அனுமதியுடன் ஜயலத் ஜயவர்தன உரையாற்றினார்.

சபாநாயகர் அவர்களே குறிப்பிட்ட தினத்தன்று சபைக்குள் நடந்த அனைத்தையும் பிரதான ஆசனத்தில் அமர்ந்தவாறு நேரில் கண்டிருப்பீர்கள் என்பதால் அன்றைய சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க விரும்பவில்லை.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். குறிப்பிட்ட தினத்தில் நான் லண்டனில் இருக்கவில்லை. நான் இத்தாலியில் இருந்தேன். அதற்கான சான்றுகளாக எனது கடவுச் சீட்டுகள், விமான பயணச்சீட்டுகளின் பிரதிகளையும் சபையில் சமர்ப்பிக்கிறேன் எனவும் ஜயலத் ஜயவர்தன தனதுரையில் குறிப்பிட்டார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பெயரைக் குறிப்பிட்டு ஜயலத் ஜயவர்தன எம்.பி. பேசியதால் நானும் பதலளிக்க வேண்டிய தேவை இருக்கிறது எனக் கூறியே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தினேஷ் மேலும் கூறுகையில், எமது அரசியலமைப்பை ஏற்று நாட்டின் இறைமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், அதற்கு எதிராக செயற்படும் எந்தவொரு உறுப்பினர்களுக்கும் அனுமதி வழங்க முடியாது.

ஜயலத் ஜயவர்தன எம்.பி. சில திகதிகளை குறிப்பிட்டுக் கூறி தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அவருக்கு எதிராக விசேட பிரேரணையொன்றை கொண்டு வருவோம்.

நாட்டின் பாதுகாப்பு முக்கியம். அதற்காகவே நாம் குரல் கொடுக்கிறோம். அது கூடாது. வெளியேறு என நீங்கள் கூறினால் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறவும் தயார்.

வெளிநாடுகளுக்குச் சென்று புலிகளுடன் கலந்துரையாடுதல், பணம் பெறுதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அதைத் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆளுமையற்ற, தைரியமற்ற அரச விரோத தேசத்துரோகிகள் இங்கு இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்தக் காலத்தில் புலிகளுடன் கலந்துரையாடியதை இந்தச் சபையில் தைரியமாக கூறியிருக்கிறார்கள். நான் இவ்வாறு பேசியிருந்தால் தைரியமாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.

வி.ஐ.பி. கடவுச்சீட்டை பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்கு எதிராக துரோகமிழைக்க எவருக்கும் அனுமதிக்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக