21 டிசம்பர், 2010

கிண்ணியாவில் வெடி பொருட்கள் மீட்பு


கிண்ணியா, தல்லரப்பு காட்டுப் பகுதி யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடி பொருட்கள் சீனக்குடா பொலி ஸாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி தல்லரப்பு மகாவலி கங்கை கரையில் சோதனை நடத்தப்பட்டது.

இதன் போது 4 1/2 கிலோ கிராம் எடையுள்ள 3 கிளைமோர் குண்டு கள், மிதி வெடிகள் 5, 80 டெடனேட்டர்கள், சீ–4 ரக வெடிபொருட்கள் 1800 கிராம் என்பன கண்டு பிடிக்கப்பட்டன.

இவை யுத்த காலத்தில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக