21 டிசம்பர், 2010

லண்டனுக்கான விமான சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்



மோசமான பனிப்பொழிவு காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லண்டன் ஹீத்துறூ விமான நிலையத் துக்கான சேவைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகின என்று ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் ஹீத்துறூ விமான நிலையம் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து ஹீத்துறூ விமான நிலையத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஹீத்துறூ விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான விமான சேவைகள் மீண்டும் நேற்று முதல் ஆரம்பமாகியதாக ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக