21 டிசம்பர், 2010

உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்டம் மீதான விவாதம் ஜனவரி 4 இல் அமைச்சர் தினேஷ் குணவர்தன


புதிய உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அடுத்த மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

தொகுதி வாரி முறையையும்,விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி உத்தேச தேர்தல் முறை திருத்தச் சட்டம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் புதிய முறைப்படி நடத்து வதா, பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதா என இதுவரை அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்த அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது தெரிந்ததே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக