3 நவம்பர், 2010

சந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப “நாசா” திட்டம்


சந்திரனுக்கு மீண்டும் விஞ்ஞானிகளை அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அதிக அளவு செலவாகும் என கருதி அதிபர் ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், சந்திரனுக்கு எந்திர மனிதனை (ரோபாட்) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹீவ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மைய நாசா என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித குணங்களை கொண்ட எந்திர மனிதனை சந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணி 1000 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக