4 நவம்பர், 2010

ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பலத்த அடி

திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பலத்த அடி விழுந்தது. பிரதிநிதிகள் சபை முழுவதையும், செனட்சபையில் முக்கிய இடங்களையும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கைப்பற்றியது.

இந்த இடைத்தேர்தலில் ஒபாமாவின் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது அவரது பொருளாதாரக்கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையே காட்டுகிறது எனக் கருதப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீட்சி பெற வழிவகுக்கும் எனக் கருதப்பட்ட அந்த கொள்கைகளை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

435 இடங்கள் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் அனைத்து இடங்கள், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையின் 37 இடங்கள், 37 மாகாண கவர்னர் பதவிகள் மற்றும் எண்ணற்ற மாகாண, உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலில் அமெரிக்காவைச் சேர்ந்த கோடானகோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதில், ஜனநாயகக்கட்சி முன்பைவிட சற்று குறைவான பெரும்பான்மைப் பெற்று செனட் சபையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.

தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி, மக்கள்பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 235, குடியரசுக்கட்சிக்கு 178 உறுப்பினர்களும் இருந்தனர். 2 இடங்கள் காலியாக இருந்தன. 100 இடங்கள் கொண்ட செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு 59, குடியரசுக்கட்சிக்கு 41 இடங்கள் இருந்தன.

இன்னும் பல இடங்களிலிருந்து வாக்குப்பதிவு விவரங்கள் வரவேண்டிய நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு (கூடுதலாக 57 இடங்களுடன்) 230 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு வெறும் 164 இடங்கள்மட்டுமே கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 100 இடங்கள் கொண்ட செனட் சபையை 51 இடங்களைப் பிடிப்பதன் மூலம் ஜனநாயக கட்சி எப்படியும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடும். அதில் ஜனநாயக கட்சியின் 6 இடங்களை பறிப்பதுடன் குடியரசுக்கட்சி 46 இடங்களைமட்டுமே கைப்பற்ற முடியும் எனவும் கவர்னர் பதவிகளுக்கான 37 இடங்களில் ஜனநாயகக் கட்சி 9 இடங்களை இழந்து 14 இடங்களையும், குடியரசுக்கட்சி கூடுதலாக 8 மாகாணங்களை வென்று 27 இடங்களையும் பிடிக்கும் என கணிக்கப்பட்டது. தெற்கு கரோலினை மாகாணத்தில் நிக்கி ஹேலி வெற்றி பெறுவார் எனவும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட மற்ற இந்தியா வம்சாவளியினர் 6 பேர் தோல்வியடைந்தனர்.

தேர்தல் முடிவு எபப்படியிருக்கும் என ஒரளவுக்குத் தெரிந்துவிட்டதால் அதிபர் பராக் ஒபாமா செனட் சபை மைனாரிட்டி தலைவர் மிச் நெகானால், அடுத்த அவைத்தலைவராக வரக்கூடியவர் எனக் கருதப்படும் ஜான் போனர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசினார்.

போனருடன் ஒபாமா இனிமையாகப் பேசினார். இதற்காக ஒபாமாவுக்கு போனர் நன்றி தெரிவித்தார் என போனரின் உதவியாளர் கூறினார். மக்கள் பிரதிநிதிகள் சபையில் மெஜாரிட்டி பெற்ற கட்சியைச் சேர்ந்த ஸ்டெனி ஹோயரிடமும், அவைத்தலைவர் நான்சி பெலோசியுடனும் அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் பேசினார்.

அமெரிக்கர்களின் முன்னேற்றத்திற்காக எதிர்க்கட்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து பணியாற்ற விரும்புவதாக ஒபாமா தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனநாயக கட்சியைப் பொருத்தவரை, முன்பு ஒபாமாவிடமிருந்த இலினாய்ஸ்ட் தொகுதியை கைப்பற்றியது ஒபாமாவுக்கு தோல்வியைக் கொடுத்ததுபோலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக