3 நவம்பர், 2010

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கடுகதி ரயில் சேவை

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு பறக்கோட்டைக்கும் நானுஓயாவிற்கும் இடையே இரு தினங்களுக்கு கடுகதி ரயில் சேவை இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.35 மணிக்கு நானுஓயா நோக்கி புறப்படும். அதேவளை நானுஒயாவிலிருந்து புறக்கோட்டை நோக்கி பிற்பகல் 3.15 மணிக்கு ரயில் சேவை இடம்பெறும்.

இப்புகையிரதம் பேராதனை, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ஆகிய புகையிரத நிலையங்களில் தரித்து நிற்கும் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக