3 நவம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியம் வழங்க அழைப்பு சம்பந்தன் எம்.பியிடமிருந்து பதில் இல்லை


கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பது தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், இன்னமும் சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லையென்று ஆணைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு கடந்த ஜுலை மாதத்திலிருந்து சம்பந்தனைக் கேட்டு வந்தபோதிலும், அவர் இதுவரை எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை என்று ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

சாட்சியமளிப்பதற்குச் சம்பந்தன் தயாராக இருப்பதாகவும் ஆணைக்குழு அவருக்குத் திகதி வழங்கவில்லையென்று கூறப்படுவதில் உண்மை கிடையாதென்றும் அவர் கூறினார். சம்பந்தன் எம். பி.யின் சாட்சியத்தை வரவேற்றுக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக