3 நவம்பர், 2010

ஜேர்மனியின் Schmalkalden நகரைச்சேர்ந்த மக்கள்



ஜேர்மனியின் Schmalkalden நகரைச்சேர்ந்த மக்கள் இன்று காலை எழுந்து தமது வீடுகளின் கதவுகளையும் யன்னல்களையும் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இரவோடு இரவாக அந்த நகரின் வீதியில் பாரிய குழி ஏற்பட்டிருந்தது தான் அவர்களது அதிர்ச்சிக்குக் காரணம்.

இந்தக் குழியால் வீதி இரண்டாகப் பிளந்து காணப்பட்டது. வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் இந்தப் பாரிய குழியின் அந்தரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. வழமையான வாழ்விட நகரமான இந்த நகரில் பல கராஜுகள் திடீரென இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இது ஒரு மண்சரிவு அல்லது நில அதிர்வு போல் காணப்படுகின்றது. 20 மீட்டர் ஆழமும்இ 40 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்தக் குழி காணப்படுகின்றது. அண்மையிலுள்ள 23 கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணத்தை கண்டறிவதில் சம்பந்நப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆச்சரியத்தக்க வகையில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக