4 நவம்பர், 2010

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த பதினொரு இந்திய மீனவர்கள் கடற் படையினரால் மீட்பு

வடக்கு கடற் பரப்பில் தத்தளித்த பதினொரு இந்திய மீனவர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டி ருந்த இலங்கை கடற் படையினர் காப்பாற்றியதாக கடற்படைப் பேச் சாளர் கப்டன் அதுல செனரத் கூறி னார்.

இவர்களைப் பாதுகாப்பாக தமிழ் நாட்டுக்கு திருப்பி அனுப்ப நட வடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நெடுந்தீவுக்கு வட மேற்கே பய ணம் செய்த 4 ஆழ் கடல் படகுகள் இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டன. இதில் பயணித்த மீனவர்கள் நெடுந் தீவுக்கு அழைத்து வரப்பட்டதோடு படகுகளும் கடற்படையினரால் இழுத்து வரப்பட்டதாக கடற் படைப் பேச்சாளர் கூறினார்.

படகுகள் கடற் படையினரால் திருத்தப்பட்டுள்ளதோடு மீட்கப் பட்ட மீனவர்கள் குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறிவி த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் இந் திய மீனவர்களை துன்புறுத்துவதா கக் கூறப்படும். குற்றச்சாட்டுகள் பொய் என்பது இதன் மூலம் உறுதி யாவதாகவும் பேச்சாளர் குறிப்பிட் டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக