4 நவம்பர், 2010

ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பவனிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு






ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாந்தோட்டையை நோக்கி புறப்பட்ட சர்வமத பவனி நேற்று காலை கிளிநொச்சி நகரை வந்தடைந்த போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆயிரக் கணக்கானோர் கூடி வரவேற்பளித்ததுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இதன்போது கிளிநொச்சி நகர் பாதுகாப்பு படையினரின் சிவில் அதிகாரி உட்பட அரச அதிகாரிகள், ஆலயங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். மாண்புமிகு ஜனாதிபதி யின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இந்து, கிறிஸ்தவ, பெளத்த கடவுளர்களது திருவுருவப் படம் மற்றும் திருவுருவ சிலைகளும் இப்பவனியில் இடம்பெற்றன.

இதேவேளை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தினை முன்னிட்டு மக்களின் வாழ்த்துக்களையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாந் தோட்டைக்கான இந்த பவனி நேற்று முன்தினம் காலை யாழ்ப்பாணம் ஸ்ரீநாக விகாரை முன்பாக பெளத்த, இந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்ப மாகியது.

இப்பவனியின் முன்னால் அழகிய முத்துப்பல்லக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் ஜனாதிபதியின் உருவப் படம் சகல இன மக்களுக்கும் வணக்கம் கூறுவதாக கட்டப்பட்டிருந்தது. இரண்டாவது வாகனத்தில் மத நல்லிணக்கத்தை சித்தரிக் கும் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டி ருந்தது. மற்றுமொரு வாகனமும் அலங்கார ஊர்தியாக பவனியில் இடம்பெற்றுள்ளது.

இந்த பவனி குழுவினர் யாழ். மக்களின் செய்தியை 19 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதியிடம் கையளிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக