4 செப்டம்பர், 2010

கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு; சென்னையில் நடத்த கோரிக்கை

சர்வதேகொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு    தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு;    சென்னையில் நடத்த கோரிக்கைச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர் முருகபூபதி என்பவர் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அவருக்கு சிவதம்பி விடுத்துள்ள வேண்டுகோளில் உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவதம்பி கூறியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம் என்று சிவதம்பி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் இலங்கை தமிழ் பத்திரிகையான வீரகேசரியின் 80-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்றுள்ளார். அவர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, பகுதியில் உள்ள திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக