4 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு:ஐதேக உறுப்பினர் சாகும் வரை உண்ணாவிரதம்?

அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 8ஆம் திகதி அரசாங்கத்தினால் 18ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த நாளில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற முன்றலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக