5 செப்டம்பர், 2010

பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐ.தே.க பிரதிநிதித்துவப்படுத்தாது - திஸ்ஸ அத்தநாயக்க

உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அரச சேவையில் உள்ள உயர் பதவிகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநித்துவப் படுத்தக்கூடிய ஒருவரை நியமிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஐ.தே.கவின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், .

‘ அரசிற்கு சட்டவிரோதமானதும் மற்றும் பலவந்தமான அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கும் பலத்தை ஏற்படுத்தும் முகமாக உள்ள பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐக்கிய தேசியகட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒருவரை கட்சியால் நியமிக்கப்போவதில்லை’ எனத் தெரிவித்தார்..

பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐ.தே.காவை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய 2 பேர், ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் 2 பேர் மற்றும் சபாநாயகரினால் ஒருவரும் நியமிக்கப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக