13 செப்டம்பர், 2010

‘இங்குள்ள மக்களின் துன்பத்தின் மீதே புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர்’ ‘உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்கிறார் லண்டன் நியூஹாம் உதவி மேயர் சத்தியநேச


யுத்தத்தினால் பாதிப்புற்ற மனங்களை மாற்றியமைத்து மீண்டும் அந்த மக்களை சமூகத்தின் நற்பிரசைகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு மாநகர சபைக்கும் உரியது. அதற்காகவும் அதேசமயம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காகவும் அரசியல்வாதிகளும் உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என லண்டன் நியூஹாம் உதவி மேயர் போல் சத்திய நேசன் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் லண்டன் நியூஹாம் நகர உதவி மேயருக்கு யாழ். மாநகர சபை வரவேற்பு அளித்தது. யாழ். மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி மேயர் போல் சத்தியநேசன் மேலும் கூறியதாவது :-

யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த சமாதானம் நீடிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும். அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாக்க முற்படாத ஜனநாயகத்திற்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களால் உங்களுக்கு நன்மையும் செய்ய முடியும் தீமையும் செய்ய முடியும். அவர்கள் இங்கே முத லீடுகளைச் செய்யக்கூடிய தருணம் இது. எனினும் இங்கே கிடைக்கக் கூடிய பென்சனை எப்படியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக் கிறார்களே தவிர இங்குள்ள மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பதாக இல்லை. உங்களை நடுத்தெருவில் விட்டதே இந்தப் புலம் பெயர்ந்தவர்கள்தான். அவர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதே இங்கேயுள்ள மக்களின் துன்பத்தில் தான் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சுகாதாரம், குடிதண்ணீர், மாநகர சபைக்கான கட்டடம் என்பவற் றிற்கான கோரிக்கைகளை முதல்வரும் ஆணையாளரும் உரையாற்றிய ஏனை யோரும் முன்வைத்துள்ளனர். பிரித்தானியா மக்களின் தேவை அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கிறதே தவிர கட்டடங்கள் பற்றிச் சிந்திப்பதில்லை. மாநகர சபைக்கான கட்டடத்தை அமைக்க இதர நாடுகளின் உதவியைக் கோரினால் நானும் அதற்கு உதவுவேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபையுடன் நில்லாது யாழ்ப்பாணம் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சபையை ஆரம்பித்து அதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் எனது ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகர ஆணையாளர் மு. செ. சரவணபவ பேசும்போது கூறியதாவது,

எமது யாழ். நகரம் போரின் வடுக்களாக வடிகான்கள், வீதிகள் உட்பட சிதைந்த நிலையிலேயே உள்ளது. இவற்றையெல்லாம் புனரமைத்து மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை நிறைவேற் றுவதென்பது கஷ்டமானதாகவே உள்ளது. அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வர்த்தகர்களின் உதவிகள் கிடைத்தாலும் கூட முழுமையான செயற்பாடுகளை முன் னெடுக்க வெளி உதவிகள் தேவையாக உள்ளது. எமது நகரத்தை அழகும் தூய் மையும் கொண்டதாக மாற்றியமைக்கக் கூடியதாக உங்களது உதவிகள் தேவை. பிரிட்டன் இதற்கென உதவ நீங்கள் முயற்சி செய்வீர்கள் என எல்லோருமே எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.

மாநகர சபை செயலாளர் இ. இரத் தினசிங்கம், உறுப்பினர் இ. மங்களநேசன், பொறியியலாளர் என். சிவப்பிரகாசம் ஆகியோரும் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக