13 செப்டம்பர், 2010

நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு; அரச ஊழியருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

அரச சேவை தொழிற்சங்கங்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரச ஊழியர்களின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதற்கிணங்க அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்பின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 20 வீதமான வாய்ப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ஜுலை மாதத்திற்கு முன் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாவது மொழித்தேர்ச்சி நடைமுறையை நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற இனிமேல் 30 வீதமான அரச ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத்தகையவர்கள் அரச நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவையே தோற்ற முடியும் என்ற நிலை மாறுவதுடன் இவர்கள் நான்கு தட வைகள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அலவி மெளலானாவின் தலைமையில் ஏழு தொழிற்சங்கச் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக