13 செப்டம்பர், 2010

மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வாழ்க்கையை ஏற்படுத்துவதே நோக்கம் ஜனாதிபதி






மக்கள் மகிழ்ச்சியுறும் எதிர்கால த்தைக் கட்டி யெழுப்புவதிலேயே அரசா ங்கத்தின் வெற்றி தங்கியுள் ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக் கருத்திட்டங்களை காலந்தாழ்த்த முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏராளமான கட்டிடங்களைக் கட்டியெழுப்புவதன்றி மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழு ப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

சீத்தாவக்க பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகக் கட்டிடத்தின் முதற் தொகுதியை உத்தி யோக பூர்வமாக அங்குரார் ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

நாம் கடந்த காலங்களில் கொடூரமான யுத்தத்திற்கு முகங்கொடுத்து அதனை வெற்றி கொண்டுள்ளோம். எச்சந்தர்ப்பத்திலும் எம்மால் முடியாது, எம்மிடம் இல்லை என்று நாம் காரணங் காட்டாமல் முன்சென்றோம். யுத்தம் செய்ய பணம் இல்லாததாலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டோமென அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கூறிய காரணத்தையும் அறிக்கை யொன்றில் காணக் கிடைத்தது.

நான் ஜனாதிபதி பதவியேற்று இன்னும் 5 வருடம் கூட பூர்த்தியாக வில்லை. இக்கால கட்டத்தில் நாம் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளோம். அதே போன்று இந்நாட்டில் பாரிய அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தியதும் இந்த ஐந்து வருட காலத்துக்குள் தான் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக