23 ஆகஸ்ட், 2010

புத்தளத்தில் திடீர் மழை : உப்பளங்கள் சேதம்

திடீரென புத்தளம் நகரில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்போக அறுவடைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு உப்பு சேதமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலுள்ள சுமார் 350க்கு மேற்பட்ட தனியார் உப்பளங்களில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகின்றது. முதலாவது அறுவடை இடம்பெற்று முடிந்தது. இரண்டாவது அறுவடைக்காக நீர் நிரப்பட்டு உப்பும் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

எனினும் கடந்த சனிக்கிழமை பெய்த திடீர் மழையினால் அவை யாவும் நீரில் கரையுண்டு போனதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் ரூபா பெறுமதியான உப்பு, இவ்வாறு சேதமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக