23 ஆகஸ்ட், 2010

யாழ்-பூநகரிக்கிடையில் விஷேட படகுச் சேவை


உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி யாழ்ப்பாணத்திற்கும், பூநகரிக்கும் இடையிலான விஷேட படகுச் சேவையை ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியும் வட மாகாணத்தின் சுற்றுலாத்து றையை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த படகுச் சேவையின் மூலம் ஒல்லாந்தர் கோட்டை, பூநகரிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள், மற்றும் தொல்பொருள் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பூநகரியி லுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள்,

தொல்பொருள் இடங்கள் அபி விருத்தி செய்யப்பட்டு, குடாநாட் டின் உற்பத்தி பொருட்களை விற் பனை செய்யும் கூடமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பூநகரியை சுற்றுலா பயணத்தல மாக அபிவிருத்தி செய்வதே இதன் மற்றுமொரு நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக