23 ஆகஸ்ட், 2010

அமெரிக்க- இலங்கை விமானப் படைகளிடையே கூட்டு ரோந்து


இலங்கை வான் பரப்பில் அமெரிக்க வான்படையுடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளில் ஈடுபட இலங்கை வான் படை தீர்மானித்துள்ளது.

விசேடமாக இலங்கை கடற்பரப்பின் மேலான கண்காணிப்புப் பணிகளிலேயே அமெரிக்க வான்படையினரின் சேவை பெறப்பட இருக்கிறது.

இத் தகவல்களை இலங்கையின் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ரத்மலானையில் இடம்பெற்ற விமானப்படை வீரர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக