23 ஆகஸ்ட், 2010

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள்' - நல்லிணக்க ஆணைக்குழு தனது இரண்டாம் கட்ட விசாரணைகளை இன்று ஆரம்பித்துள்ளது.

சர்வதேச தொடர்புகளுக்கான கதிர்காமர் கற்கை நிலைய கட்டிடத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது. இவ்வமர்வில் பொது மக்களின் சாட்சியங்கள் பெறப்படவுள்ளன.

அமர்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக