23 ஆகஸ்ட், 2010

பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துக் கொள்வனவு:அமைச்சு ஏற்பாடு

பன்றிக் காய்ச்சலுக்கான ஒரு மில்லியன் தொகுதி தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் ஏ.எச்1.என்1. வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் வேகமாகத் தொற்றுவதால், இலங்கையிலும் அதன் பாதிப்பு ஏற்படலாம் என சுகாதார அமைச்சு கருதுகிறது. இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளது.

உலக சுகாதர ஸ்தாபனத்திடம், சுகாதார அமைச்சு இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு வைத்திய அதிகாரி சுதத் பீரிஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக