23 ஆகஸ்ட், 2010

50 இளைஞர், யுவதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி


இந்தியாவிலுள்ள விதவைகளுக் கான சுயதொழில் அமைப்பின் ஊடாக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இலங்கையைச் சேர்ந்த 50 இளைஞர், யுவதிகள் அடுத்த மாதம் இந்தியா பயணமாகவுள்ளனர்.

200 விதவைகள் சுயதொழிலுக்காக அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், இவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கே 50 பேர் இந்தியா செல்லவுள்ளனர் என்றார்.

பயிற்சிகளை பெற்று வரும் 50 பேர் தெரிவு செய்யப்பட்ட 700 விதவைகளுக்கு உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையங் களில் பயிற்சிகளை வழங்கவுள்ளனர் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக் காட்டினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக