13 ஆகஸ்ட், 2010

நான் மீண்டும் வருவேன்:மேர்வின் சில்வா

நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பதவிக்கு வருவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேர்வின் சில்வாவிற்கு ஆதரவு தெரிவித்தும் அவர் மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்று களனியில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் பதவிக்கு வருவேன் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து நான் கரிசணைகாட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். களனி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்துடன் கட்டிவைத்த சம்பவத்தை அடுத்து பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக