28 ஆகஸ்ட், 2010

இலங்கை மாலுமிகள் கடத்தல் : ரமழான் முடிந்த பின்பே விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மாலுமிகளை ரமழான் நோன்பு முடிந்த பின்னரே விடுவிப்பது சாத்தியமாகும் என இலங்கை தொழில் வழங்குநர் முகவர் நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் மார்ச் மாதம் முதலாந் திகதி எம்.வி சவூதி அரேபிய கப்பலில் இருந்த இலங்கை மாலுமிகள் உட்பட கப்பல் பணியாளர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.

இலங்கை மாலுமிகளை விடுவிப்பதை துரிதப்படுத்தக் கோரி மகஜரொன்றை கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு மேற்படி மாலுமிகளின் குடும்பத்தினர் கையளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக