28 ஆகஸ்ட், 2010

மழை நிவாரணத்துக்கு நிதி திரட்ட இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: கபில்தேவ் யோசனை



.



பலத்த மழையினால் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவும்- பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி இதற்கு நிதி திரட்டி தர வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனியார் டி.வி. ஒன்றுக்கு கபில்தேவ் அளித்த போட்டியில் கூறியதாவது:-

மழையினால் பாகிஸ்தானில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்து உள்ளனர். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் உதவ வேண்டியது அவசியம்.

இதற்காக இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் கிரிக்கெட் விளையாடி நிதி திரட்ட வேண்டும். இந்த போட்டி இந்தியா அல்லது பாகிஸ்தான் மண்ணில் நடக்க வேண்டும். 2 நாட்டுக்கும் பொதுவான இடத்தில் போட்டியை நடத்தினால் அது எடுபடாது.

இது சம்பந்தமாக நான் இந்திய கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கமும் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் இஜாஸ்பட் சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவில்லை. அதே போல் பாகிஸ்தான் அணியும் இந்தியா வரவில்லை.

மழை நிவாரணத்துக்காக இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடத்தப்பட்டால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கோ அல்லது இந்திய அணி பாகிஸ்தானுக்கோ செல்லும் நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக