28 ஆகஸ்ட், 2010

மட்டக்களப்பில் மீன்பிடிக்குச் சென்ற மூவரைக் கானவில்லை

மட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து மீன்படிக்காக கடலுக்குச் சென்ற மூவரைக்காணவில்லை என கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம்திகதி மீன்பிடிக்குச் சென்ற 53வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராஜ், 20 வயதுடைய சிவராஜ் ஜீவராஜ், 41 வயதுடைய செல்லப்பா மனோகரன் ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் தமிழ் தேசியக:கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர்.

அவர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய குணவர்த்தனாவுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அத்துடன் மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ணவுக்கும் இக் காணாமல் போனமை குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப:புலிகள் அமைப்பின் உறுப்பினருமான பி.சகாயமணி காணாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக