28 ஆகஸ்ட், 2010

மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம். கிருஷ்ணா





மீனவர்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் கிடைத்த தகவலையடுத்து இந்திய அரசு இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். இதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக