28 ஆகஸ்ட், 2010

மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறா? : சீமான் கேள்வி

மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறென்றால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன் என்றார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

சிறையிலுள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, செய்தியாளர் மத்தியில் இவ்வாறு கூறினார்.

தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்துவதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விளக்கம் கூறிய பிறகு வெளியே வந்த சீமான், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை?

நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தைத் தூண்டி விட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது.

மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தைத் தொடங்கவுமில்லை. தமிழர் வாழ்வுரிமையைக் காப்பதுதான் எமது நோக்கம்.

இந்திய அரசியல் சாசன சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு மட்டும் கிடையாதா?" என்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக