18 ஜூலை, 2010

ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு

ரணில் மற்றும் விமல் வீரவன்ச கோமாளிகளைக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம் தான் அரசியல் அமைப்பு என பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயகா தெரிவித்தார்.

புதிய அரசியல் மாற்ற முன் எடுப்புக்கள் தொடர்பாக கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே அவர் அதனைத் தெரிவித்தார்.

இன்று சுயாதீன ஆணைக் குழுக்கள் செயல் இழந்துள்ளன. இந்நிலையில் வெகு விரைவாக 17 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலையுண்டு. இதை விட்டு விட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையைக் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறி வேறு ஒரு நாடகம் நடத்தப்படப் போகிறது.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றுப் பிரதமர் முறைக்கு ஆதரவு என்பது அப்பட்;மான பொய்யாகும். அதற்கு ரனில் விக்கிரம சிங்க இன்னும் இணங்கவில்லை. அப்படியாயின் ரனில் இணங்கியது என்ன தெரியுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை கொண்டு வருவது பற்றிப் பேசவே அவர் இணங்கியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும், ஜோசப் மைக்கள் பெரேரவும் சேர்ந்து இலங்கைக்கான அரசியல் அமைப்பபை மாற்ற முடியாது. அதற்கு துறைச்சார்ந் நிர்ணர்கள் கூடிள்ளனர். அவர்களைக் கொண்டு வெள்ளை அறிக்கை தயாரிக்கப் பட்டு அது பாகீரளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற அனுமதியுட்பட வெய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. உடனடியாக 17 ஆவது திருத்தம் அமுல்படுத்ப் பட வேண்டும். பொது சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு எனப் பல ஆணைக்குழுக்களும், ஆணையாளர்களும் சுயாதீனமாக இயங்க முடியும். இன்று அவர்கள் ஜனாதிபதியில் தங்கியுள்ளனர். ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு முறையும் பாராளுமன்றச் செயலாளர் நியமிக்கப்படுகிறார்.

காரணம் ஜனாதிபதியால் பாரளுமன்ற செயலாளரை இரண்டு வாரத்திற்கே நியமிக்க முடியும். எனவே இரு வாரத்திற்கு ஒரு முறை அவருக்கு புதிய திகதியிட்ட கடிதம் வழங்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழு இருப்பின் இன்னிலை தோன்றாது. இது எமது பாராளுமன்றத்தில் நடக்கின்ற கோமாளிக் கூத்தல்வா.

இவ்வாறான கூத்திற்கு இரண்டு கோமாளிகள் அல்லது ஜோக்கர்கள் இருப்பதாக அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக