18 ஜூலை, 2010

மக்கள் சபை செயலர் பதவிகளுக்கு மாத இறுதியில் நேர்முகம் 36,000 விண்ணப்பங்கள்


நாடு முழுவதும் மக்கள் சபை செயலாளர்களாக (ஜனசபா) பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரச நிர்வாக கட்டமைப்பின் ஒரு அங்கமாக மக்கள் சபை செயலாளர் பதவிக்காக இது வரை 36,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் மூன்று கட்டங்களாக நடை பெறும். நியமனங்கள் வழங்குவதற்காக நிதி அமைச்சி லிருந்து தேவையான நிதியும் கிடைத்துள்ளது.

ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நியமனங்கள் வழங்கப்படு வதுடன் பயிற்சிகளும் வழங்கப் படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக