18 ஜூலை, 2010

சந்தேக நபர் கொழும்பில் கைது





எப்பாவலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 21 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

அவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக