19 ஜூலை, 2010

காரைதீவில் இன்று நடந்த செம்மொழி விழா

கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழா சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினமான இன்று காலை, அவரின் பிறந்த மண்ணான காரைதீவில் உள்ள விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், கல்முனைக் கல்வி வலயம் ஆகியவற்றுடன் இணைந்து காரைதீவு பிரதேச புத்திஜீவிகள் இணைந்து இவ்விழாவை நடத்தினர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பேராளர்கள் பெரிய துறைநீலாவணை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலமாக காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கு அலங்கார ஊர்திகள் சகிதம் அழைத்துச் செல்லப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக