19 ஜூலை, 2010

சல்வார்-கம்மீஸýக்கு யாழ் கோயிலில் தடை






யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் ஆகஸ்ட் 15 முதல் 25 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவின்போது பெண்கள் சல்வார் - கம்மீஸ் அணிந்துவர தடை விதிக்க ஆலய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக அணியும் பாவாடை - தாவணி, சேலை ஆகியவற்றை மட்டும் அணிந்து வரலாம் என்று ஆலயம் சார்பில் அறிவிக்கப்படவிருக்கிறது. ஆடவர்கள் வேட்டி அணிந்து வரலாம். கைலி என்று அழைக்கப்படும் லுங்கி, பெர்முடாஸ் என்று அழைக்கப்படும் அரை டிராயர்களுக்கு அனுமதி இல்லை.

இதை யாழ்ப்பாண நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

சல்வார் - கம்மீஸ் ஆடை உடலை நன்கு மூடி மறைக்க உதவும்போது அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது தமிழர்களின் பாரம்பரிய உடை அல்ல என்பதால் வேண்டாம் என்கிறோம் என்றார் யோகேஸ்வரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக