19 ஜூலை, 2010

போலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டுச் சபை தெரிவிப்பு

போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.

மேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார்.

இருமல், நரம்புத்தளர்ச்சி மற்றும் வலி நிவாரணம் போன்றவற்றுக்கான மருந்து வகைகளைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்தி போதை ஏற்படுத்திக் கொள்வது உட்பட மேலும் பல முறைகேடுகள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து சுகாதார அமைச்சு இம்முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ஒளடத விற்பனை நிலையங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள், நிறுவனங்களை அறிவுறுத்தும் முயற்சியை உடன் மேற்கொள்வதுடன் சட்டத்தை மீறும் மருந்து விற்பனையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வைத்தியர்கள் வழங்கும் சிட்டைகளுக்கு மட்டும் மருந்து வழங்கப்பட வேண்டும். அதே போன்று, அனுமதிப் பத்திரமற்ற, தகுதியற்ற மருந்துக் கலவையாளர்களைக் கொண்ட பாமஸிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவ்வாறு சட்டத்தை மீறும் நபருக்கு 5,000 முதல் 50,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக