19 ஜூலை, 2010

மன்னாரிலிருந்து 17 குடும்பங்கள் இன்று பெரிய பண்டிவிரிச்சானில் குடியமர்வு

மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து மேலும் 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மன்னாரில் இருந்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் கடந்த வாரம் அவர்களுடைய சொந்த கிராமமான பண்டிவிரிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கான உணவு வசதிகளை மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மெல் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து இதுவரை 63 குடும்பங்களைச் சேர்ந்த 185 பேர் மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சகல பாகங்களில் இருந்தும் இதுவரை பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு 256 குடும்பங்களைச் சேர்ந்த 923 பேர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக