19 ஜூலை, 2010

நாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதம் ஆபஐ பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில் 149 பலி 21,000 பாதிப்பு

டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பக்ஹரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த பக்ஹரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்ஹரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த அடிப்படையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கென சுகாதார அமைச்சு கியூபாவிலிருந்து தருவிக்கும் பத்தாயிரம் லீட்டர் பி.ரி.ஐ. பக்ஹரியா கிடைக்கப்பெற்ற தும் அதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இந்த பக்ஹரியா வந்து சேர்ந்ததும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கண்டி நகர், அக்குறணை, கம்பளை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.

இதேவேளை இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரையும் டெங்கு நோய் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 20 ஆயிரத்து 647 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர் என்று அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.

இந்நோய் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நோய்க்கு இவ்வருடத்தை விடவும் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவு எனவும் அவ்வதிகாரி கூறினார்.

இதேநேரம் டெங்கு நுளம்பு பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்துவதற்கு டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமுள்ள மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் 61 இருப்பதாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் முதல் தெஹிவளை மருத்துவ அதிகாரி பிரிவும் டெங்கு அச்சுறுத்தல் மிக்க மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் பி.ரி.ஐ. பக்ஹரி யாவை கலாநிதி ராதிகா சமரசேகர தலை மையிலான குழுவினரே தயாரித் திருக்கின்றனர்.

இது தனியார் நிறுவன மொன்றின் ஊடாக இம்மாதத்தின் இறுதியில் சந்தைக்கு விடப்படும். இந்த பக்ஹரியா கிருமிநாசினிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் பதிவாளர் இதனைச் சந்தைப்படுத்துவதற்கு தற்காலிக பதிவையும் வழங்கியுள்ளார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக