19 ஜூலை, 2010

முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவத்தின்போது இதய நோய் வராது

முட்டை சாப்பிடும் பெண்களுக்கு    பிரசவத்தின்போது இதய நோய் வராது

முட்டை உடல்நலத்திற்கு சிறந்தது. அனைத்து வயதினரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது இதய நோய்கள் தாக்குவது பெருமளவில் குறையும். இந்த தகவலை தற்போது நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

முட்டையில் “சோலின்” என்ற திரவவடிவிலான சத்துப்பொருள் பெருமளவில் உள்ளது. இது வைட்டமின் “பி” காம்ப்ளக்சுக்கு இணையானது. “சோலின்” என்ற சத்து இதய நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. எனவே கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் முட்டை சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்னல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மேரி காடில் என்பவர் தலைமையிலான குழுவினர் பெண்களிடம் “சோலின்” சத்து குறைந்த உணவை சாப்பிட கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரசவ காலத்தின் போது 2 தடவை அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் இதய நோய் பாதிப்பு இருந்தது.

ஆகவே, கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு சத்துணவு குறித்தும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக