12 ஜூன், 2010

அமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல்ல சபையில் அமைச்சர் தினேஷ் அறிவிப்பு





அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.

ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.

ரவி கருணாநாயக்கவால் முன்வைக்கப் பட்ட பிரேரணை பொருத்தமற்றவை

என நினைக்கின்றேன். ஏனென்றால், இந்த விடயம் ஏற்கனவே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங்களின் பாதுகாப்புக்காக சட்ட ரீதியாக சிலருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க, “ஆளுந்தரப்புக்குக் கூடுதல் நேரம் விவாதத்துக்கு ஒதுக்கப்படவில்லை” என்று குறுக்கிட் டார். எனினும் தொடர்ந்து உரையாற்றிய அஸ்வர் எம்.பீ. புலிகள் இயக்கக் குழுக்களின் செயற்பாடுகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறித்தும் எடுத்துரைத்தார்.

எச். எம். எம். ஹாரிஸ் எம்.பி.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இன்னமும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றை முடக்குவதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் செயல்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் ஆயுதம் வைத் திருந்தார்கள் என்று அப்பாவி இளைஞர் களைச் சிறையில் வைத்திருக்கிறார்கள். சட்ட விரோதமாக வைத்துள்ள ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக