12 ஜூன், 2010

மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டில் 890 மில். டொலர் வருமானம் ஆண்டு இறுதியில் 4 பில். டொலர் இலக்கு





மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 67,136 பேர் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர். 2009 முதல் காலாண்டில் இத்தொகை 54,990 பேராகவே இருந்தது. இது 22 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டில் கட்டார், குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

கட்டாரிலிருந்து 72 வீதமும், குவைத்திலிருந்து 32 சதவீதமும், ஜோர்தானிலிருந்து 28 சதவீதமும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 11 சதவீதமும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அத்துடன் பஹ்ரேய்ன், மலேஷியா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன. கொரியாவிலிருந்தும் 2600 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

2009 ஆம் ஆண்டைவிட 2010 ஆம் ஆண்டு கிடைத்துள்ள அந்நிய செலாவணியை ஒப்பிடும்போது 14 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. 2009 முதல் காலாண்டில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 2010 ஆம் ஆண்டு இத்தொகை 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.

2010ஆம் ஆண்டு இறுதியில் வெளி நாட்டில் வேலைவாய்ப்பை பெற் றுச் சென்றவர்களினூடாக 4 பில்லி யன் அமெரிக்க டொலர்களை பெற் றுக்கொள்ளும் இலக்கை நோக்கியே பணியகம் செயற்படுகிறது எனவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக