12 ஜூன், 2010

13வது திருத்தத்திலும் கூடுதல் அதிகாரங்களுடன் அரசியல் தீர்வு இந்திய தலைவர்களுக்கு ஜனாதிபதி உறுதி; டில்லி விஜயம் வெற்றி என்கிறார் டக்ளஸ்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் அதிகளவு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுத்தெரிவித்தார்.

இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவரது அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியதுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் நம்பிக்கை மென்மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறினார்.

இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவி சுஸ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் பி. அந்தோனி, வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ரயில்வேதுறை அமைச்சர் மம்தா பானர்ஜி, இவர்களுடன் தமிழக எம்.பிக்கள் குழுவினரையும் சந்தித்தோம். இலங்கையின் உண்மை நிலையை கண்டறிய வருமாறு அவர்களுக்கு அழைப்பும் விடுத்தோம் என்றார்.

எனினும் இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா செயற்படுகிறது என்பது அவர்களுடன் நடத்திய பேச்சுக்களில் தெளிவாகியது.

மக்களை மீளக் குடியமர்த்துவதில் வேகம் போதாது என்பதை சுட்டிக்காட்டியதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மேல் சென்று அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதுதான் எமது அரசின் நோக்கம் என்பதையும் களத்தில் இந்திய நிறுவனங்களும் மிதிவெடி அகற்றல் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன. உண்மை யான நிலைமை அவர்களுக்கும் தெரியும். மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொள்ள வழங்கப்படுகின்ற நிதியோ, பொருட்களோ போதுமானதாக இல்லை என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம்.

இதனையடுத்து மீளக்குடியமர்த் தப்படும் மக்களுக்கு 50,000 வீடு களை கட்டிக்கொடுப்பதற்காக இந் தியா 1000 கோடி ரூபாவை நன் கொடையாக எமக்கு வழங்க முன் வந்தது. அதுமட்டுமல்ல வட பகுதி ரயில் பாதை புனரமைப்புக்காக 800 மில்லியன் ரூபாவை இலகு கடனா கவும் வழங்க முன்வந்தது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக