12 ஜூன், 2010

மலையகத்தில் தோட்ட கம்பனிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு





மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் குடியிருப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தி யமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது.

பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸின் தலைவர், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் விரைவில் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சுடன் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

முழுமையாகப் புதிதாக வீடுகளை நிர்மாணித்து முடிப்பதென்றாலும் வருட த்திற்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களாவது செல்லும். அதற்கிடையில் அரசியல் சூழ் நிலைகள் வேறு. எனவேதான் குறுகிய காலத் தீர்வாக முன்னுரிமை அடிப்படையில் வீட்டுப் பிரச்சினைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக