12 ஜூன், 2010

பொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு




ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.

இராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப் பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக