12 ஜூன், 2010

கைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்’






“தமிழகத்தில் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற சிலரது கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்” என ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் நேற்று அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றுக்கான பின்னணி பற்றி அமைச்சர் விளக்க மளித்தார். தமிழகத்தில் சூளைமேடு பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் விடயத்திற்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. சம்பவம் நடைபெற்ற பின்னரேயே சமரசம் செய்வதற்காக வந்தேன். வந்த நானும் தாக்கப்பட்டேன்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார்? ஈ. பி. ஆர். எல். எவ். அமைப்பில் அன்று இதன் சூத்திரதாரியாக செயற்பட்டவர். தூண்டிவிட்டவர் யார் என்பது பற்றி பாராளுமன்றத்தில் உரித்துக்காட்டுவேன்.

சூளைமேட்டு சம்பவத்தில் நான் குற்றவாளி என நீதிமன்றம் கூறவில்லை. சட்டப்படி கைதாகியிருந் தேன். எனினும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நான் மட்டுமல்ல ஆயுதக் குழுக்கள் அனைத் திற்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.

சூளைமேட்டு விவகாரத் தின் பின்னர் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் கள் அனைத்தும் என்னையும் என் சாக்களையும் கைது செய்ய வேண்டும் என்ற உள்நோக்கோடு ஜோடிக்கப்பட்டவை. இதன் பின்னணியில் டி. ஜி. பி. துரை செயற்பட்டார்.

இறுதியில் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை யும் அவருக்கு வந்தது. ஜனாதிபதி யுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு முன்ன தாக பலமுறை இந்தியா சென்றுள்ளேன். தமிழகம் சென் றுள்ளேன்.

ஏன் அப்போது இல்லாத எதிர்ப்பு ஜனாதிபதியுடன் செல்லும் போது மட்டும் வருகிறது? இது அரசியல் தாழ்ப்புணர்ச்சி மட்டுமல்ல, எரிச்சல், பொறமை என்றும் சொல்லலாம்.

தமிழகத்தில் எனக்கெதிராக தாக் கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர் பாக தேவையேற்பட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக இருக் கிறேன்.

என்னைக் கைது செய்ய வேண் டும் என ஆர்ப்பாட்டம் செய்வோர், கோஷம் எழுப்புபவர்கள் இந்தியா வில் தடை செய்யப்பட்ட இயக்கத் தின் தலைவர், இந்தியாவில் தேடப் படும் குற்றவாளியின் புகைப் படத்தை ஏந்தி நிற்கின்றனர்.

இலங்கை, இந்திய உடன்படிக் கையின் கீழ் பொதுமன்னிப்பு வழங் கப்பட்டுவிட்டது. இனி போகலாம் என்றவுடன் தான் நான் வந்தேன். எனினும் அன்று என்னை கைது செய்வதற்கு திரைமறைவில் சூழ்ச்சி கள் நடைபெற்றன.

இந்தியா தான் எமக்கு பயிற்சி வழங்கியது; நிதி வழங்கியது; பயிற்சி முகாம்களையும் வைத் திருந்தோம். எமக்கு மட்டுமல்ல ஆயுதக் குழுவாக செயற்பட்ட வர்களுக்கு இது கிடைத்தது. நான் வந்ததன் பின்னர் உள்நோக்கங் களுக்காக ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் நடைபெறவில்லையா? சூட்டுச் சம்பவங்கள் நடைபெற வில்லையா?

சூளைமேட்டில் வேண்டுமென்றே என்னுடனும் எனது சாக்களுடனும் மோதி பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள ரவுடிகள் சிலரை எமது ஆட்களுடன் மோதச் செய்து வீணான பிரச்சினையை உரு வாக்கினார்கள். விரைவில் பாராளு மன்றத்தில் உரித்துக் காட்டுவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக