12 ஜூன், 2010

உரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு அமைச்சர் மஹிந்த யாப்பா

உரமானியம் வழங்குவதற்காக கடந்த ஐந்து வருடத்தில் அரசாங்கம் 81,365 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2005 இல் 6,285 மில்லியன் ரூபாவும் 2006 இல் 10,696 மில்லியன்களும் 2007 இல் 10,998 மில்லியன் ரூபாவும் 2008 இல் 26,449 மில்லியன் ரூபாவும் 2009 இல் 26,935 மில்லியன்களும் செலவிடப்பட்டுள்ளன. நெல், உப உணவுப் பொருட்கள், மரக்கறி, தேயிலை, றப்பர், தெங்கு என் பவற்றுக்கு உரமானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடம் யாழ். மாவட்டத்துக்கு 3,921 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்துக்கு 1,639 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 4,114 மில்லியன் ரூபாவும் திருமலை மாவட்டத்திற்கு 17,315 மில்லியன் ரூபாவும் மட்டு. மாவட்டத்துக்கு 18,984 மில்லியன்களும் அம்பாறை மாவட்டத்துக்கு 55,470 மில்லியன்களும் பசளை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக