21 ஜூன், 2010






கிளிநொச்சி, முல் லைத்தீவு மாவட்டங்களில் மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்துவதற்கு ஏதுவாக காணிக்கச் சேரிகளை உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படவு ள்ளதாக மீள்குடியேற்ற பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தினுள் உடனடியாக காணிக் கச்சேரியை அமைக்குமாறு பிரதியமைச்சர் கருணா, யாழ். அரச அதிபர் கே. கணேஷிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகு மாரிடமும் வேண்டுகோள் விடுக்கவுள்ள தாகவும் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அனைவருக்கும் அவர்களது சொந் தக் காணியில் மீளக்குடியமர அனுமதி வழங்கப்படும். அதற்கு அவர்கள் காணிக் குரிய உறுதியை சமர்ப்பிக்க முடியும். உறுதியை பெற்றுக் கொள்வதற்காகவே காணிக் கச்சேரிகள் அமைக்கப்படவுள்ளன.

புலிகளால் பலாத்காரமாக வெளியேற் றப்பட்டு, உரியவர்கள் அல்லாத சிலரிடம் காணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவங் களும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவுடன் சென்று நிலைமை களை நேரில் கண்டு ஆராய்ந் ததுடன் துரித மீள்குடியேற்ற விடயத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்தித்து பேசவுள்ளதாகவும் கருணா அம்மான் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவில் இடம்பெயர்ந்தவர்கள் 100 குடும்பங்கள் இருப்பின் அவர்கள் இப்போது 125 குடும்பங்களாக பெருக்க மடைந்து குறிப்பிட்ட 125 குடும்பங் களுக்குமே காணி தேவையெனக் கூறும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறிய பிரதி யமைச்சர் முரளிதரன், அவ்வாறு காணிகள் வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

100 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பின் அந்த 100 குடும்பங்களுக்குரிய காணிகள் வழங்கப்படும். அதற்குரிய தாய் காணி உறுதிகளை அவர்கள் காண்பிக்க வேண்டும். காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக