21 ஜூன், 2010

சர்வதேச அகதிகள் தினம் நேற்றுப் பிரகடனம்




2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா.சபை ஜூன் 20ஆந் திகதியை சர்வதேச அகதிகள் தினமாகப் பிரகடனப்படுத்தியது. இது 2001 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் பல நாடுகளிலும் அகதிகள் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. முழு உலகிலும் மொத்தம் 40 கோடி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 10 கோடிமக்கள் அகதிகளாக வாழ்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அகதிகள் தின நினைவுச் சின்னமாக வீடு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொருத்தவரை, குறிப்பாக வடபகுதியில் 2,93,000இற்கும் மேற்பட்ட அகதிகள் வாழ்கிறார்கள். மெனிக் பாம், செட்டிக்குளம் போன்ற பகுதிகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 33,000 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இது தவிர எமது அயல் நாடான இந்தியாவிலும் பெருந்தொகையான அகதிகள் உள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை அகதி வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

இவர்களுக்காக 1117 சிறிய முகாம்கள் உள்ளன. இவை தவிர கேரளாவிலும் 700 குடும்பங்கள் வரை அகதிகளாக வாழ்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக