21 ஜூன், 2010

புத்தளத்தில் அதிவலு மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாணவன் பலி






அதி வலு மின்சார மின் கம்பி யொன்று அறுந்து விழுந்ததில் புத்தளம் நகரில் உயர்தரமாணவ ரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந் துள்ளார். அம்மாணவரின் சகோதரி யும், அவரது கணவரும் இச்சம் பவத்தில் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சகோதரி கர்ப்பிணிப் பெண்ணெனத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு 7.40 மணியள வில் புத்தளம் நகரில் ஐந்தாம் குறுக்குத் தெருவிலுள்ள ஜே. பி. லேனில் இடம்பெற்றதாக பொலி ஸார் கூறினர். தொலைக் காட்சி அண்டனாவைச் சரிசெய்யும் போது மின் கம்பியில் விழுந்ததால் இச்சம் பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

என்றாலும் இது ஊர்ஜிதப்படுத்தப் படவில்லை. இச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர் புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி பயிலும் அப்துல் ஜப்பார் முஹம் மத் ஆஷிக் (வயது 19) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சகோதரியான பாத்திமா ரிஸானாவும் (வயது 23), அவரது கணவரான முஹம்மத் பெளமி (வயது 28) யுமே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத் திலிருந்த தென்னை மரமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

பதினொராயிரம் வோர்ல்ட் அதிவலு கொண்ட மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான புலன் விசாரணை களைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இம்மின்கம்பி தானாக அறுந்து விழுந்ததா, அல்லது தொலைக்காட்சி அன்டனாவை சரிசெய்யும் போது அது மின்கம்பி மீது விழுந்ததால் அறுந்ததா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக